Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு அங்கன்வாடி மையத்தில் ஆட்சியரின் மகள்: இவரல்லவா அரசு ஊழியர்

பிப்ரவரி 11, 2020 01:56

நெல்லை: அரசு அதிகாரிகளும், அவர்களின் பிள்ளைகள் அரசு வழங்கும் சேவைகளைப் பெற முன்வருவதே அவற்றின் தரத்தை உயர்த்த ஒரே வழி. அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாகவே பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தனது குழந்தையை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளது பல தரப்பிலும் பாராட்டைப் பெற்று வருகிறது. 

நெல்லை மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியராக இருப்பவர் திருமதி ஷில்பா. இவர் தனது மூன்று வயது மகள் கீதாஞ்சலியை திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். மற்ற மாணவர்களுடன் தரையில் அமர்ந்து பாடங்களைக் கற்கும் கீதாஞ்சலி, தவறாமல் தினமும் ஆர்வத்துடன் வருவதாக அங்கன்வாடி மையக் காப்பாளர் தெரிவிக்கிறார். 

பிரபல தமிழ் ஊடகம் ஒன்று 2019ஆம் ஆண்டு ஒரு சர்வே நடத்தியது. நடத்திய சர்வே முடிகளின்படி, அரசு ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளிகளில் படித்தால் பள்ளியின் தரம் மேம்படும்' என்று 70.9சதவீத மக்கள் தெரிவித்திருந்தனர். 

மேலும் இந்த சர்வே முடிவுகள் அரசு அதிகாரிகளும், அவர்களின் பிள்ளைகள் அரசு வழங்கும் சேவைகளைப் பெற முன்வருவதே அவற்றின் தரத்தை உயர்த்த ஒரே வழி என்று தெரிவிப்பதாக பொதுமக்கள் பலரும் தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்தும், இதற்கு முன்பும் பல அரசு அதிகாரிகள்,ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது தன் குழந்தையையும் அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார் நெல்லை ஆட்சியர் ஷில்பா. 

தலைப்புச்செய்திகள்